ஓமனில் நெல்லைத் தொழிலாளி மர்மச் சாவு: சடலத்தைப் பெற குடும்பத்தினர் தவிப்பு
ஓமன் நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நெல்லையைச் சேர்ந்த தொழிலாளியின் சடலத்தை மீட்டுத்தரக் கோரியும், மரணத்துக்கான உண்மையையும் கண்டறிய வேண்டும் என வலியுறுத்தியும் அவரது குடும்பத்தார் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.









