ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

தாமிரபரணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவன்

ஓசூரைச் சேர்ந்த 8ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் சுரேஷ்குமார் தாமிரபரணி ஆற்றில் குளிக்கும் போது அடித்துச் செல்லப்பட்டான்.

News image
Updated On :28 செப்டம்பர் 2013, 5:04 am

முருகன்

ஓசூரைச் சேர்ந்த 8ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் சுரேஷ்குமார் தாமிரபரணி ஆற்றில் குளிக்கும் போது அடித்துச் செல்லப்பட்டான்.

ஓசூரைச் சேர்ந்த முத்துக்குமார் தனது மனைவி செல்வி, இரண்டு மகன்களுடன் காலாண்டு விடுமுறைக்காக திருநெல்வேலியில் உள்ள அண்ணன் வீட்டுக்கு வந்திருந்தார்.

இன்று காலை குடும்பத்தோடு தாமிரபரணி ஆற்றில் குளிக்க கொக்கிடகுளம் பகுதிக்கு வந்தார். அப்போது, முத்துக்குமாரின் மூத்த மகன் சுரேஷ்குமார் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.

இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.