அவசர விடுப்பில் வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆயுள் தண்டனைக் கைதி குறிப்பிட்ட நாளில் சிறைக்கு வராததால் சிறை அதிகாரியின் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர், பெரியமாரியம்மன்கோயில் செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் ஜான்பீட்டர் (37). இவர் ஒரு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் உள்ளார். இவரது தாய் லட்சுமியின் உடல் நிலை சரியில்லை என்று கடந்த 24.9.13-ம் தேதி இவரது தம்பி அருள்ராஜ் கொடுத்த விண்ணப்பத்தின் பேரில், ஜான்பீட்டர் 3 நாள் அவசர கால விடுப்பில் சிறையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வந்துள்ளார். 28.9.13-ம் தேதி மாலை சிறைக்கு ஜான்பீட்டர் வந்திருக்க வேண்டும். ஆனால் அவர் வரவில்லை. இதனையடுத்து மதுரை மத்திய சிறையின் சிறை அலுவலர் (பொறுப்பு) இளவரசன், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஜான்பீட்டரைத் தேடி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

