தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்குவது கொடைக்கானல். கொடைக்கானலுக்கு தரைப்பகுதியில் இருந்து செல்ல பழனி-கொடைக்கானல் மலைப்பாதையும், வத்தலக்குண்டு-கொடைக்கானல் மலைப்பாதையும் பயன்பாட்டில் உள்ளது. இதில் பழனி-கொடைக்கானல் பாதையில் அதிக கொண்டைஊசி வளைவு, பசுமைப்பள்ளத்தாக்கு, இயற்கைக் காட்சிகள் அதிகமாக உள்ளதால் இப்பாதையை அதிகமான பயன்பாட்டில் உள்ளது. தற்போது தமிழக அரசு சுற்றுலாப்பயணிகள் மேம்பாட்டிற்காக பெருமாள்மலை முதல் சவரிக்காடு வரையிலான தூரத்தை சுமார் ஐந்து கோடி மதிப்பில் சீரமைக்க உத்திரவிட்டுள்ளது. கோடைவிடுமுறை வரவுள்ள நிலையில் இப்பணிகள் தற்போது சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. கோவை சூலூரை சேர்ந்த லாரிகள் இப்பணியில் ஈடுபட்டுள்ளது.