கொடூர், தடப்பெரும்பாக்கம், திருவேங்டபுரம் பகுதியில் (ஒரு சில இடங்களில் மட்டும்) பிரச்சாரத்தை முடித்து விட்டு வேன் வேண்பாக்கம் பகுதியில் வந்தது. திருவேங்கடபுரகம், பொன்நகர், கொக்குமேடு உள்ளிட்ட இடங்களுக்கு பிரச்சாரம் செய்ய வேட்பாளர் வருவார் என கட்சி தொண்டர்கள் அவரை வரவேற்க ஆவலுடன் காத்திருந்தனர். வேட்பாளரை அழைத்து வந்த திமுக மாவட்ட பொறுப்பாளர் உள்ளிட்டோர் மேற்கண்ட பகுதிகளுக்கு அழைத்து செல்லாமல் மாற்று பாதையில் அழைத்து சென்றுள்ளனர். இதையடுத்து வேண்பாக்கம் பகுதியில் ரவிக்குமார் வந்தபோது தங்கள் பகுதிக்கு வராததால் அதிருப்தியில் இருந்த திமுக கட்சி தொண்டர்கள் சிலர் வேட்பாளர் வேனை மறித்து வேனில் இருந்தவர்களிடம் வாக்கு வாதம் செய்தனர்.