மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

நெல்லை அருகே இளைஞர் வெட்டிக்கொலை

திருநெல்வேலி அருகே கரையிருப்பில் மணல் அள்ளுவது தொடர்பாக எழுந்த மோதலில் இளைஞர் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இச் சம்பவத்தில் மேலும் 5 பேர் காயமடைந்தனர்

Updated On :20 ஏப்ரல் 2014, 2:50 pm

திருநெல்வேலி அருகே கரையிருப்பில் மணல் அள்ளுவது தொடர்பாக எழுந்த மோதலில் இளைஞர் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இச் சம்பவத்தில் மேலும் 5 பேர் காயமடைந்தனர்.

திருநெல்வேலி தாழையூத்து அருகே உள்ள கரையிருப்பு வடக்கூரைச் சேர்ந்த சிவனுபாண்டி மகன் சித்திரைகுமார் (35). இவரது சகோதரர் சுப்பிரமணியன் (30). இவர்களுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் மண் அள்ளுவது தொடர்பாக பிரச்னை இருந்து வந்ததாம். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாம். இதில் இருதரப்பினரும் அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது.

இதில் ஒரு தரப்பைச் சேர்ந்த சித்திரைகுமார், சுப்பிரமணியன், மற்றொரு தரப்பைச் சேர்ந்த கரையிருப்பு சுகுமார் மகன் செந்தில்குமார் (36), பேச்சிமுத்து மகன் முருககுட்டி (50),  சரவணகுமார் (22), மாயாண்டி மகன் காந்திமணி (38) ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். ஆனால், வழியிலேயே சித்திரைகுமார் இறந்தார். மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் செந்தில்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து தாழையூத்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.