மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

90 லட்சம் வாக்குகள் நீக்கம்! பாஜகவுக்கு மேற்கு வங்கம் பதிலடி கொடுக்க வேண்டும்!

மேற்கு வங்க பேரவைத் தேர்தலில் மமதா பானர்ஜிக்கு அரவிந்த் கேஜரிவால் ஆதரவு தெரிவித்துள்ளது குறித்து...

News image

அரவிந்த் கேஜரிவால் - ஏஎன்ஐ

Updated On :27 ஏப்ரல் 2026, 1:46 pm

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தின் (எஸ்ஐஆர்) பெயரில் 90 லட்சம் வாக்காளர்களை நீக்கிய பாஜகவுக்கு மேற்கு வங்க மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்மூலம் மேற்கு வங்க தேர்தலில் மமதா பானர்ஜிக்கு தனது ஆதரவை கேஜரிவால் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் மமதாவின்ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கு எதிராக தனித்துப் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் நிலையில், மமதாவுக்கு கேஜரிவால் ஆதரவு தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு கடந்த 23 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு முடிந்த நிலையில், மே 29 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். தேர்தல் பிரசாரத்திற்கு இன்று கடைசிநாள் என்பதால், அரசியல் கட்சித் தலைவர்கள் மும்முரமாக வாக்கு சேகரித்தனர். இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவு பெற்றது. 2ஆம் கட்ட வாக்குப் பதிவுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் மமதாவுக்கு ஆதரவு தெரிவித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களுடன் அரவிந்த் கேஜரிவால் பேசியதாவது:

''தேர்தலையொட்டி முதல்வர் மமதா பானர்ஜிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். சர்வாதிகாரத்திற்கு எதிராக சண்டையிடும் மேற்கு வங்க மக்களை பாராட்டுகிறேன்.

கடந்த இரு நாள்களாக மாநிலத்தில் உள்ள சூழலை நேரடியாகக் கண்டு வருகிறேன். 90 லட்சம் வாக்காளர்களை நீக்கிய பாஜகவுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்'' எனக் குறிப்பிட்டார்.

Summary

People of Bengal will take revenge for cutting 90 lakh votes Arvind Kejriwal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.