மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

மேற்கு வங்க மக்கள் பழிவாங்குவர்: பாஜகவுக்கு கேஜரிவால் எச்சரிக்கை

மேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்குகள் குறைக்கப்பட்டதற்காக பாஜகவை மக்கள் பழி வாங்குவர் என்று அரவிந்த் கேஜரிவால் எச்சரிக்கை

News image

அரவிந்த் கேஜரிவால் - கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 10:27 am

மேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்குகள் குறைக்கப்பட்டதற்காக பாஜகவை மக்கள் பழி வாங்குவர் என்று ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் எச்சரித்துள்ளார்.

மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் அரவிந்த் கேஜரிவால் பேசுகையில், "இந்தத் தேர்தலில் போட்டியிடும் மமதா பானர்ஜிக்கு எனது வாழ்த்துகள். இந்த சர்வாதிகாரத்துக்கு எதிராகப் போராடும் மேற்கு வங்க மக்களுக்கும் எனது வாழ்த்துகள்.

கடந்த 2 நாள்களில் மாநிலத்தில் நடந்தவற்றையெல்லாம் பார்க்கும்போது, மாநிலத்தில் 90 லட்சம் வாக்குகள் குறைக்கப்பட்டதற்காக மக்கள் பழி வாங்குவார்கள் என்று தோன்றுகிறது" என்று தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டியில் நிலவிவரும் நிலையில், திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவாக அரவிந்த் கேஜரிவால் பேசியுள்ளார்.

முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் தொடா்ந்து நான்காவது முறையாக ஆட்சிக்கு வர தீவிரம் காட்டிவரும் நிலையில், ஆட்சியைக் கைப்பற்ற பாஜக கடும் முயற்சிகளை செய்து வருகிறது.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதியில் நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கான தேர்தல் புதன்கிழமையில் (ஏப். 29) நடைபெறவுள்ளது. அதுமட்டுமின்றி, மாநிலத்தின் சாதனை அளவாக முதற்கட்டத் தேர்தலில் 93.2 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

முதற்கட்டத் தேர்தலைவிட 2ஆம் கட்டத் தேர்தல்தான் மிக முக்கியம், ஏனெனில் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறும் தொகுதிகள் பலவும் மமதா பானர்ஜியின் கோட்டையாக விளங்குபவை.

Summary

People of Bengal will take revenge for cutting 90 lakh votes, says AAP National Convenor Arvind Kejriwal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.