ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சுதந்திர இந்தியா இதுபோன்ற மோசமான நிலையை சந்தித்ததில்லை: ஜெயலலிதா பிரசாரம்

அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா தென்சென்னை தொகுதிக்குட்பட்ட கந்தன்சாவடியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது

News image
Updated On :21 ஏப்ரல் 2014, 12:50 pm

வேல்முருகன்

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா தென்சென்னை தொகுதிக்குட்பட்ட கந்தன்சாவடியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது குஜராத்தை விட தமிழகம் சிறந்த மாநிலம் என்று புள்ளிவிபரத்துடன் கூறினார். அவர் கூறியதாவது:

சென்னை மாநகரின் குடிநீர் தேவையை அதிமுக அரசு தீர்த்துவைத்துள்ளது.  178 தேர்தல் வாக்குறுதிகளில் 150-ஐ அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது  குஜராத் வளர்ந்த மாநிலம் என்று கூறுவது தவறு. இந்தியாவின் சிறந்த நிர்வாகி மோடியல்ல. குஜராத்தைவிட தமிழகம் வளர்ந்த மாநிலம் ஆகும். மக்களவைத் தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

தமிழர் விரோதப்போக்குடன் செயல்பட்ட காங்கிரஸ் அரசில் திமுக அங்கம் வகித்தது. திமுக காங்கிரசுக்கு ஆதரவான போக்கைக் கொண்டிருப்பதால் கார் இறக்குமதி வழக்கிற்காக காங்கிரசை திமுக விமர்சனம் செய்யவில்லை. திமுக ஆதரவு தேவைப்படும் என காங்கிரசும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை கார் இறக்குமதி குறித்து கருணாநதியும் ஸ்டாலினும் பதிலளிக்க வேண்டும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.