ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் தநதையுடன் பகலில் நடந்து சென்ற ஆசிரியையிடம் செயின் பறிப்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை பகலில் பிரதான சாலையில் தந்தையுடன் நடந்து சென்ற ஆசிரியை கழுத்தில் அணிந்திருந்த செயினை இரு சக்கரத்தில் வந்து பறித்துச் சென்ற நபர்களை

News image
Updated On :21 ஏப்ரல் 2014, 2:04 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை பகலில் பிரதான சாலையில் தந்தையுடன் நடந்து சென்ற ஆசிரியை கழுத்தில் அணிந்திருந்த செயினை இரு சக்கரத்தில் வந்து பறித்துச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர், நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் நாராயணன். இவரது மகள் ராஜலட்சுமி (24). பட்டதாரி ஆசிரியையான இவர் என்.ஜி.ஓ.ஓ. காலனியில் உள்ள மழலையர் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். திங்கள்கிழமை இவரது தந்தைக்கு உடல் சரியில்லாததால், இவரது சகோதரி அவரை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றுள்ளார். பின்னர் ராஜலட்சுமி வேலை செய்யும் பள்ளிக்கு பகல் 2.30 மணியளவில் இருவரும் வந்துள்ளனர். பள்ளிக்கூடம் முடிந்துவிட்டதால் மூவரும் சேர்ந்து நடந்து வீடு நோக்கி சென்று கொண்டிருந்துள்ளனர். லயன்ஸ் பள்ளிக்கும் தியாகராஜா பள்ளிக்கும் இடையே மூவரும் ஜன நெருக்கடி மிகுந்த பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் இருவர் வந்துள்ளார். பின்னால் கைலி அணிந்து வந்த இளைஞர், மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி வந்து ராஜலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த ஒன்னறை பவுன் தங்க நகையை பறித்துள்ளார். இதனைத் தடுக்க வந்த அவரது தந்தையை அந்த நபர் தள்ளிவிட்டுள்ளார். இதில் கீழே விழுந்த அவர் காயம் அடைந்தார். ராஜலட்சுமிக்கும் காயம் ஏற்பட்டது.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் ராஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து செயினை பறித்துவிட்டு தப்பி ஓடிய இருவரையும் தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.