தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் மாலை 5 மணி வரை 72 சதவீதம் வாக்குகள் பதிவு

நாகை மாவட்டம், மயிலாடுதுறை, சீர்காழி (தனி), பூம்புகார், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் (தனி), கும்பகோணம், பாபநாசம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய மயிலாடுதுறை மக்களவைத்

News image
Updated On :24 ஏப்ரல் 2014, 12:08 pm

சங்கர்

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் மாலை 5 மணி வரை 72 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை, சீர்காழி (தனி), பூம்புகார், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் (தனி), கும்பகோணம், பாபநாசம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் 1,582 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

ஒரு சில வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரத்தை கையாளுவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, வாக்குப் பதிவு தொடக்கத்தில் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது. இயந்திரக் கோளாறு காரணமாக, பாபநாசம், சீர்காழி ஆகிய பகுதிகளில் 3 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரம் மாற்றப்பட்டு, வாக்குப் பதிவு தொடங்கப்பட்டது.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் வாக்குப் பதிவு காலையிலிருந்து சுமார் 11 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 7 மணி முதல் 9 மணி வரை 19 சதவீதமும், காலை 11 மணி வரை 33 சதவீதமும், பகல் 1 மணி வரை 49 சதவீதமும், பிற்பகல் 3 மணி வரை 60.5 சதவீதமும், பிற்பகல் 5 மணி வரை 72 சதவீதமும் இத்தொகுதியில் வாக்குகள் பதிவாகின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.