திருவரங்குளம் பகுதிகளில் உள்ள  கிணறுகளில் தண்ணீர் இன்றி விவசாயிகள் தவிப்பு

திருவரங்குளம் பகுதிகளில் உள்ள கிணறுகளில் தண்ணீர் இன்றி விவசாயிகள் தவிப்பு

புதுக்கோட்டை திருவரங்குளம் ஒன்றிய பகுதிகளில் அதிகமான கிராமப்பகுதிகள் உள்ளன. இங்கு பெரும்பாலனோர் தங்களுடைய வாழ்வாதாரத்திற்கு விவசாயங்களை நம்பி வருகின்றனர். தற்போது இங்கு மழை இல்லாமல் கிணறு,
Published on

புதுக்கோட்டை திருவரங்குளம் ஒன்றிய பகுதிகளில் அதிகமான கிராமப்பகுதிகள் உள்ளன. இங்கு பெரும்பாலனோர் தங்களுடைய வாழ்வாதாரத்திற்கு விவசாயங்களை நம்பி வருகின்றனர். தற்போது இங்கு மழை இல்லாமல் கிணறு, குளங்கள், குட்டைகளில் தண்ணீர் இன்றி வறண்டு போய் காட்சி அளிக்கிறது. இதனால் அதிகமான வயல்களில் உள்ள செடிகள் எல்லாம் காய்ந்துபோகும் நிலைமைக்கு ஆகிவிட்டது.

அது மட்டும் அல்லாமல் குடிப்பதற்கும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. 60அடி ஆழ கிணறுகளில் கையிறு கட்டி இழுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வருணபகவான் எங்களுக்கு கருணை காட்டுவாரா என்ற ஏக்கத்தில் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com