ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

வீரபாண்டி கௌமாரிம்மன் கோயில் சித்திரை திருவிழா முன்னேற்பாடு கூட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை வீரபாண்டி கௌமாரியம்மன்கோயில் சித்திரை திருவிழா முன்னேற்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்

Updated On :30 ஏப்ரல் 2014, 12:23 pm

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை வீரபாண்டி கௌமாரியம்மன்கோயில் சித்திரை திருவிழா முன்னேற்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.மகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.சோமுபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

   வீரபாண்டி கெüமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 6-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் இருந்து திண்டுக்கல், மதுரை மாவட்டங்கள் மற்றும் கேரளத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து அக்கினிச் சட்டி, ஆயிரம் கண் பானை, காவடி, பால் குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தி அம்மனை தரிசித்துச் செல்வர்.

     திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதி, மின்வசதி, தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடு, சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதி செய்து தருவது குறித்து இந்து அறநிலையத்துறை, வருவாய் துறை, காவல் துறை, பொதுப்பணி துறை, சுகாதாரத் துறை,  மின்வாரியம், தீயணைப்புத் துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் ராஜேந்திரன், பொது சுகாதார  துணை இயக்குநர் காஞ்சனா, பொதுப் பணித்துறை செயற் பொறியாளர்(கட்டடம்) ராமநாதன், வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வக்குமார், தேனி காவல் துணை கண்காணிப்பாளர் சீமைச்சாமி, கோயில் செயல் அலுவலர் சுரேஷ், வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.