எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நெல்லையில் மதுக்கூடங்களில் திடீர் சோதனை: 750 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

திருநெல்வேலியில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் 750 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2014, 3:16 pm

முத்துக்குமார்

திருநெல்வேலியில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் 750 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் 40 மைக்ரான் அளவுக்கு குறைந்த பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் உபயோகப்படுத்த தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பொதுமக்கள் வீட்டிலிருந்து துணிப்பைகளை எடுத்துச் சென்று பொருள்களை வாங்கத் தொடங்கினர். ஆனால், அதிகாரிகளின் முறையான கண்காணிப்பு இல்லாததால் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்தது. இதையடுத்து அண்மையில் நடைபெற்ற மாநகராட்சி சாதாரண கூட்டத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு மேயர் (பொ) பூ.ஜெகநாதன் என்ற கணேசன் பதிலளிக்கையில், திருநெல்வேலி மாநகராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து ஏற்கெனவே உள்ள பிளாஸ்டிக் பொருள்களை 18 ஆம் தேதிக்குள் அப்புறப்படுத்த அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் மாநகராட்சி ஆணையர் அர.லட்சுமி உத்தரவின்பேரில், திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பாளையங்கோட்டை, உடையார்பட்டி, வண்ணார்பேட்டை, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடங்களில் திங்கள்கிழமை திடீர் சோதனை நடத்தப்பட்டது. மாநகர நல அலுவலர் பாலகணேஷ்குமார், சுகாதார ஆய்வாளர் சாகுல் உள்பட மாநகராட்சி அலுவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உடன்சென்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மாநராட்சி அலுவலர்கள் 3 குழுக்களாக திங்கள்கிழமை பிரிந்து சென்று 11 டாஸ்மாக் மதுக்கூடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 750 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள், பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படும். 40 மைக்ரான் அளவுக்கு குறைந்த பிளாஸ்டிக் பைகள், டம்ளர்களை பொதுமக்கள் பயன்படுத்தக் கூடாது. 40 மைக்ரானுக்கு மேல் உள்ளவையும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதிப்பெற்றே விற்பனை செய்ய வேண்டும். 

பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில் அடுத்தக்கட்டமாக அபராதம் விதிக்கப்பட உள்ளது. அதன்படி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவோருக்கு ரூ.100-ம், விற்பனையாளருக்கு ரூ.500-ம், உற்பத்தியாளருக்கு ரூ.1000-ம் அபராதமாக விதிக்கப்படும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.