பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

முல்லைப் பெரியாறு அணை ஆய்வுக் கூட்டம்: புறக்கணித்தது கேரளா

முல்லைப்பெரியாறு அணை மூவர் ஆய்வு குழுவின்   மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை கேரள பிரதிநிதி  கேரள தலைமை செயலாளர் குரியன் புறக்கணித்தார். 

News image
Updated On :19 ஆகஸ்ட் 2014, 8:26 am

அறிவழகன்

முல்லைப்பெரியாறு அணை மூவர் ஆய்வு குழுவின்   மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை கேரள பிரதிநிதி  கேரள தலைமை செயலாளர் குரியன் புறக்கணித்தார். 

குமுளியில் கூட்டம் நடந்தால் மட்டுமே, கேரள அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் என கேரள அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் கூட்டத்தை புறக்கணித்தார். இந்நிலையில் மத்திய நீர்வள ஆணைய முதன்மை பொறியாளர் என்.ஏ.வி நாதன் தலைமையில் கூட்டம் நடந்தது. தமிழக அரசுப் பிரதிநிதியான தமிழ்நாடு பொதுப்பணித்துறை செயலாளர் சாய்குமார் கலந்து கொண்டார். கூட்டம் மதிய இடைவேளைக்குப் பின் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.