குடும்ப நல அறுவை சிகிச்சையில் அலட்சியம்: கட்டிலில் முடங்கிய பெண் ஆம்புலன்ஸில் வந்து ஆட்சியரிடம் மனு
திருநெல்வேலி மாவட்டம், தென்காசி அரசு மருத்துவமனையில் குடும்ப நல அறுவைச் சிகிச்சை செய்தபோது செய்யப்பட்ட அலட்சியத்தால் சிறுநீரகக் குழாய் பாதி்த்து கைக்குழந்தையை தவிக்கவிட்டு பெண் ஒருவர் கட்டிலில் முடங்கிக் கிடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார்மனு அளிக்கப்பட்டுள்ளது.










