தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

மின்சாரம் பாய்ந்து சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் மரணம்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் மின்சாரம் பாய்ந்து தீட்சிதர் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2014, 3:18 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் மின்சாரம் பாய்ந்து தீட்சிதர் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.

சிதம்பரம் கீழரத வீதியைச் சேர்ந்த கீர்த்திவாச தீட்சிதர் (45). இவர் நடராஜர் கோயிலில் கொடிமரம் அருகே உள்ள ஸ்ரீபாலதண்டாயுதபாணி சந்திதியில் பூஜை செய்து வருகிறார். இந்நிலையில் சனிக்கிழமை இரவு அர்த்தசாம பூஜை முடிந்தவுடன் கோயிலில் உள்ள மின்விளக்குகளை அணைத்துக் கொண்டு வந்தார்.

அப்போது கொடிமரம் அருகே உள்ள மின்சார ஸ்விட்சை அணைக்கும் போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. உடனடியாக அவரை சக தீட்சிதர்கள் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கீர்த்திவாச தீட்சிதர் திங்கள்கிழமை காலை இறந்தார். இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.