தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

விநாயகர் சதுர்த்தி: சிதம்பரத்தில் திரண்ட கிராமப்புற மக்கள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை, விநாயகர் குடை உள்ளிட்ட பொருள்கள் வாங்க சிதம்பரம் நகருக்கு சுற்றுப்புற கிராமங்கள், நகர்களில் வசிக்கும் மக்கள் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில்

News image
Updated On :29 ஆகஸ்ட் 2014, 11:57 am

ஜி.சுந்தரராஜன்

விநாயகர்சதுர்த்தியை முன்னிட்டு சிதம்பரம் நகரில் பொருள்கள் வாங்க திரளான மக்கள் திரண்டதால், கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை, விநாயகர் குடை உள்ளிட்ட பொருள்கள் வாங்க சிதம்பரம் நகருக்கு சுற்றுப்புற கிராமங்கள், நகர்களில் வசிக்கும் மக்கள் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் வெள்ளிக்கிழமை காலை திரண்டனர். இதனால் வர்த்தக பகுதியான மேலரதவீதியில் கூட்டம் அலைமோதியது. சாலையோரம் இருபுறமும் தரைக்கடைகள் போடப்பட்டு விநாயகர்சிலை, விநாயகர்குடை, தேங்காய், பொறி, அவல், பொட்டுக்கடலை, நாவப்பழம், அருகம்புல்மாலை, எருக்கன் மாலை உள்ளிட்ட விநாயகருக்கு படைக்க பயன்படுத்தப்படும் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டன. இதனால் மேலரதவீதி வழியாக பேருந்து, கார் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, வேறு வழியாக போக்குவரத்து போலீஸாரால் பேருந்துகள் திருப்பி விடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.