திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அருகே மாயமான தொழிலாளி கோடகன் கால்வாயில் சடலமாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டார்.
சுத்தமல்லி அருகே உள்ள பழவூர் பகுதியைச் சேர்ந்த மகன் தம்பிராஜ் (42). கூலித்தொழிலாளி. கடந்த 29 ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர், பின்னர் வீடுதிரும்பவில்லையாம். இதையடுத்து அவரது மனைவி அம்பிகா சுத்தமல்லி காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகார் செய்தார். அப்போது கோடகன்கால்வாய் கரையில் அவரது உடைகள் கிடந்ததாம். இதையடுத்து போலீஸாரும், பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்களும் கோடகன்கால்வாயில் தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் ஆகிவிட்டதால் தேடும்பணி நிறுத்தப்பட்டது. இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை காலையில் கொண்டாநகரத்தில் கோடகன்கால்வாயில் ஆண்சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று விசாரி்த்தபோது சடலமாகக் கிடந்தது தம்பிராஜ் என்பது தெரியவந்தது. சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து சுத்தமல்லி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹிட்லர்

என் சுயசரிதை

90 லட்சம் வாக்குகள் நீக்கம்! பாஜகவுக்கு மேற்கு வங்கம் பதிலடி கொடுக்க வேண்டும்!

மெய்ப்பொருள்
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

