இதில் சம்பவ இடத்திலேயே வன்னியர் சங்கத் தலைவர் இளம்பரிதி இறந்தார். படுகாயமுற்ற பழனி கவலைக்கிடமான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸார், வேளங்கிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அதிமுக மாவட்ட கவுன்சிலர் செல்வரங்கம், சகாதேவன், முகுந்தன், பாலமுருகன், சுப்பிரமணியன், தட்சிணாமூர்த்தி, திருஞானம் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.