சிதம்பரம் அருகே சாக்காங்குடி கிராமத்தைச் சேர்ந்த கொடிகருப்பன் (25). சென்னை தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் இவர் கடந்த 13-4-12 ஆண்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது கிரிக்கெட் விளையாடும் போது அதே ஊரைச் சேர்ந்த சதீஷ் (26) என்பவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் கொடிகருப்பன் சென்னைக்கு செல்ல சதீஷ் வீட்டின் வழியாக சென்றுள்ளார். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த சக்திவேல் (46), காவேரி (45), ரமா (33) ஆகிய மூவரும் கொடிகருப்பனை பிடித்துக் கொள்ள, சதீஷ் பிச்சுவா கத்தியால் மார்பில் மற்றும் பல்வேறு குத்திவிட்டு தலைமறைவாயினர். இதில் படுகாயமுற்ற கொடிக்கருப்பன் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றார்.