அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகர் அருகே வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து பொருள்கள் சூறை: உரிமையாளர் உள்பட 5 பேர் மீது வழக்கு

விருதுநகர் அருகே வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து உள்ளே பொருள்களை தெருவில் தூக்கியெறிந்து சூறையாடியதாக உரிமையாளர் உள்பட 5 பேர் மீது போலீஸார்

Updated On :5 டிசம்பர் 2014, 3:09 pm

விருதுநகர் அருகே வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து உள்ளே பொருள்களை தெருவில் தூக்கியெறிந்து சூறையாடியதாக உரிமையாளர் உள்பட 5 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

     பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டியன்(40). இப்பகுதியைச் சேர்ந்த மதியழகன் என்பவரின் வீட்டில் ஒத்திக்கு குடியிருந்து வந்தார். இந்நிலையில் வீட்டை உடனே காலிசெய்து தரும் படி தகராறு செய்தாராம். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.  ஏற்கனவே இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

]    இந்நிலையில் வியாழக்கிழமை இரவு மதியழகன் அவரது மனைவி பாலா உள்ளிட்ட உறவினர் 5 பேர் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து தகாத வார்த்தைகள் பேசியதோடு, அங்கிருந்த பொருள்கள் அனைத்தையும் வெளியே தெருவில் வீசியெறிந்து சூறையாடினார்களாம். இது தொடர்பாக பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் தங்கப்பாண்டியன் புகார் செய்தார். அதன் அடிப்படையில் மதியழகன் அவரது மனைவி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.