92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரின் தீர்ப்புகள் திசை காட்டும் விளக்குகளாய் ஒளிரும்: பெ.மணியரசன்

நீதிபதி வி. ஆர். கிருஷ்ணய்யரின் தீர்ப்புகள் திசை காட்டும் விளக்குகளாய் ஒளிரும் என தமிழ்த் தேசியப்

News image
Updated On :5 டிசம்பர் 2014, 11:53 am

ஜி.சுந்தரராஜன்

நீதிபதி வி. ஆர். கிருஷ்ணய்யரின் தீர்ப்புகள் திசை காட்டும் விளக்குகளாய் ஒளிரும் என தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுளஅள அறிக்கை: நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரின் மறைவுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது. இந்திய நீதித்துறை வரலாற்றில் அணையா விளக்காக, என்றும் நின்று நிலவக்கூடிய திசைகாட்டும் தீர்ப்புகளை வழங்கியவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டில் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கூடாது என்ற வழக்கில் பதவி உயர்வுகளிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஒளிகாட்டும் தீர்ப்பு வழங்கினார். அத்தீர்ப்பில் சாதிய ஒடுக்குமுறை, தீண்டாமை கொடுமை ஆகியவற்றின் சமூக இருப்புகளை விரிவாக விவாதித்து அவற்றைப் போக்குவதற்கான கருத்துகளையும் வழங்கினார்.

மரண தண்டனை கூடவே கூடாது என்று அவர் தீர்ப்புரைகளில் கூறியுள்ளார். மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான தூக்கு மரத்தில் ஒருவர் தொங்கவிடப்படும் பொழுதெல்லாம் இந்திய அரசுக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கிறது என்று நாம் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றார். பணி ஓய்வுக்குப் பிறகு மனித உரிமைக் களத்தில் குறிப்பாக மரண தண்டனைக்கு எதிரான இயக்கங்களில் அவர் துடிப்போடு பங்கு கொண்டார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று உயிருள்ளவரை போராடி வந்தார்.

இளம் வழக்கறிஞர்களுக்கும் மனித உரிமைப் போராளிகளுக்கும் வழிகாட்டும் நீதித்துறை வல்லுனராகவும் மனிதஉரிமைப் போராளியாகவும் என்றென்றும் வி.ஆர். கிருஷ்ணய்யர் விளங்குவார் என அறிக்கையில் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.