கடந்த 2010-ம் ஆண்டு சபரிமலை புல்மேட்டு பாதையில் நெரிசலில் சிக்கி 104 பேர் இறந்தனர். எங்களது சமாஜத்தின் போராட்டத்தின் பிறகு 104 பேருக்கு தலா ரூ.7 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. எங்களது சமாஜத்திற்கு மொத்தம் 863 கிளைகள் உள்ளன. கடலூர் மாவட்டத்தில் மட்டும் 234 கிளைகள் உள்ளன. கேரள அரசும், தேவசம்போர்டும் சபரிமலை பக்தர்களுக்கு போதிய வசதியை செய்து தரவில்லை. நாங்கள் காலை முதல் இரவு வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குகிறோம். மருத்துவசேவை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வருகிறோம். சபரிமலைக்கு கூட்டம் வருவதை குறைக்க அரசியல் ரீதியாக அங்குள்ள ஒரு கும்பல் முயற்சி செய்து வருகிறது. தேவசம்போர்டில் உள்ள உறுப்பினர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்பதால், பக்தர்களுக்கு எவ்வித வசதியும் செய்யாமல் வியாபார நோக்கில் செயல்படுகின்றனர். அடுத்த ஆண்டு முதல் கியூ வரிசையில் நீண்ட நேரம் நிற்கும் ஐயப்ப பக்தர்களுக்கு சப்பாத்தி உணவு வழங்கவுள்ளோம்.