92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தில்லைக்காளியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.7 லட்சத்து 55 ஆயிரத்து 765

இந்து அறநிலையத்துறை உதவிஆணையர் சி.ஜோதி, நிர்வாக அதிகாரி க.முருகன், ஆய்வாளர் ஜி.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. கோயில் அலுவலர்கள்

News image
Updated On :24 டிசம்பர் 2014, 11:59 am

ஜி.சுந்தரராஜன்

பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீ அருள்மிகு தில்லைக்காளியம்மன் கோயிலில் புதன்கிழமை உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் 7 லட்சத்து 55 ஆயிரத்து 765 ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது.

இந்து அறநிலையத்துறை உதவிஆணையர் சி.ஜோதி, நிர்வாக அதிகாரி க.முருகன், ஆய்வாளர் ஜி.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. கோயில் அலுவலர்கள் வாசு, வெங்கடேசன், ராஜ்குமார் மற்றும் கடலூர் மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர்கள் மற்றும் அறநிலையத்துறை ஊழியர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் 7 லட்சத்து 55 ஆயிரத்து 765 ரூபாய் கிடைத்தது. மேலும் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய தங்கம் 72 கிராம், வெள்ளி 160 கிராம் ஆகியவை இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.