கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் பாசனம் மற்றும் வடிகால் வசதிக்காக பரவனாறு, கீழ்ப்பரவனாறு, தலைப்பரவனாறு, இடைப் பரவனாறு என உள்ளது. இவ்வற்றில் தலைப்பரவனாறு, இடைப்பரவனாறு ஆகிய பகுதிகளில் நிதி ஒதுக்கப்பட்டு கரைகள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் கீழ்ப்பரவனாறு பகுதிகளில் மட்டும் கரைகள் உயர்த்தப்படவில்லை. இதனால் வெள்ளக் காலங்களில் கீழ்பகுதி கிராமங்களான ஆடூர், கொத்தவாச்சேரி, குண்டியமல்லூர், பூவாலை, வயலாமூர், சாத்தப்பாடி, சொக்கன்கொல்லை, பால்வாத்துண்ணான், காக்காமண்டபம், வில்லியநல்லூர், புதுச்சத்திரம் உள்ளிட்ட 30 கிராமங்களில் வெள்ள நீர்புகுந்து பயிரிடப்படும் பயிர்கள் மற்றும் குடியிரகுப்புகள் பாதிக்கப்படுகிறது. எனவே வெள்ளச் சேதத்தை தடுத்திட பரவனாற்று கரைகளை உயர்த்தி அமைப்பதுடன், வெள்ளநீர் நேரடியாக கடலில் சென்று கலக்கும் வகையில் உருவாக்கப்பட்ட 'அறுவாமூக்கு' திட்டத்தை செயல்படுத்திட வேண்டும்.