பச்சையப்பன் அறக்கட்டளை தலைவர் ஜெயச்சந்திரன், செயலாளர் ராஜகோபால், நிதிக்குழுத் தலைவர் பிரதாப்குமார், நிர்வாகிகள் ராமநாதன், ஹேமநாத், ராமலிங்கம் ஆகியோர் தேர்களையும், ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்த தேர்கள் புதுப்பிக்க வாங்கப்பட்ட மரங்கள் ஆகியவற்றை பார்வையிட்டனர். பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில் கோயிலுக்கு வழங்கப்பட்ட நகைகளையும் ஆய்வு செய்தனர். பின்னர் கோயில் பொதுதீட்சிதர்களிடம் ஆலோசனை நடத்திய பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள் காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய இடங்களில் இருந்து சிற்பிகளை வரவழைத்து தேர்களை விரைந்து சீரமைப்பது என முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.