எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கேபிள் டிவி சந்தா வசூலுக்கு அரசு ரசீது வழங்க ஆட்சியர் உத்தரவு

தேனி மாவட்டத்தில் கேபிள் டிவி மாதச் சந்தாவுக்கு அரசு சார்பில் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ள ரசீதுகளை பயன்படுத்தி பொதுமக்களிடம் வசூல் செய்ய வேண்டும் என்று கேபிள்

Updated On :4 பிப்ரவரி 2014, 1:01 pm

தேனி மாவட்டத்தில் கேபிள் டிவி மாதச் சந்தாவுக்கு அரசு சார்பில் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ள ரசீதுகளை பயன்படுத்தி பொதுமக்களிடம் வசூல் செய்ய வேண்டும் என்று கேபிள் ஆபரேட்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி கூறினார்.

        இது குறித்து அவர் கூறியது: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மாதம் ரூ.70 கட்டணத்தில் கேபிள் டிவி சேவையை கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் வழங்கி வருகிறது. இதில் ரூ.20-ஐ கேபிள் ஆபரேட்டர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு செலுத்துகின்றனர். கேபிள் டிவி சந்தாவாக அரசு நிர்ணயித்துள்ள ரூ.70 மட்டும் வசூலிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், சந்தா தொகை வசூலிப்பதற்கான ரசீதுகளை கேபிள் ஆபரேட்டர்களுக்கு அரசு கேபிள் டிவி நிறுவனம் அச்சிட்டு வழங்கியுள்ளது.

      மாவட்டத்தில் இம்மாதம்(பிப்ரவரி) முதல் அரசு கேபிள் டிவி நிறுவனம் அச்சிட்டு வழங்கியுள்ள ரசீதுகளை மட்டுமே பயன்படுத்தி பொதுமக்களிடம் கேபிள் டிவி சந்தா வசூலிக்க வேண்டும் என்று கேபிள் ஆபரேட்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கேபிள் டிவி சந்தாவுக்கு தனிப்பட்ட முறையில் ரசீதுகளை வழங்கி வசூலிக்கக் கூடாது. முறைகேடுகளில் ஈடுபடும் கேபிள் ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொதுமக்கள் கேபிள் டிவி சந்தாவுக்கு அரசு நிர்ணயித்துள்ள ரூ.70-ஐ மட்டும் வழங்கி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதலாக சந்தா வசூலிப்போர், வசூல் தொகைக்கு அரசு ரசீது வழங்க மறுப்போர் குறித்து மாவட்ட கேபிள் டிவி வட்டாட்சியர் செல்போன் எண்:94980 02588, 97505 65906 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இது குறித்த புகார்களை arasucabletvcorpgmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இ-மெயில் அனுப்பலாம். தொலைபேசி எண்:044-28221233 மூலம் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். 044-28253021 என்ற எண்ணுக்கு பேக்ஸ் மூலம் தகவல் அனுப்பலாம் என்றார் ஆட்சியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.