என்எல்சியில் பணிபுரியும் 13,000 ஒப்பந்த தொழிலாளர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 10ஆம் தேதி வேலைநிறுத்த அறிவிப்பு நோட்டீஸ் வழங்க உள்ளனர்.
என்எல்சி ஒப்பந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் 17வது வட்ட அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க அலுவலகத்தில் நெய்வேலியில் அண்மையில் நடைபெற்றது. ஐஎன்டியுசி ஒப்பந்த சங்க சிறப்பு தலைவர் சுகுமார் தலைமை வகித்தார்.
ஒப்பந்த தொமுச, ஐஎன்டியுசி, அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம், சிஐடியு, பாட்டாளி தொழிற்சங்கம், தொழிலாளர் விடுதலை முன்னணி, இன்கோசர்வ் மற்றும் ஒப்பந்ததாரர் சங்கம், ஏஐடியுசி, பிஎம்எஸ், தமிழக வாழ்வுரிமை தொழிற்சங்கம் ஆகியவைகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வரும் 10 ஆம் தேதி என்எல்சி நிர்வாகத்திடம் வேலைநிறுத்த நோட்டீஸ் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி 6ஆம் தேதி கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் செய்வதெனவும், ஆர்ப்பாட்டம் குறித்து 5ஆம் தேதி சிஐடியு அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடத்துவது எனவும் முடிவு மேற்கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்

தென்னை விவசாயிகளிடமிருந்து கொப்பரையை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு

பெரும் வரவேற்பை பெற்றுள்ள திமுக அரசின் திட்டங்கள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மேற்கு வங்கம்: விண்ணப்பம் ஏற்கப்பட்ட வாக்காளா்களுடன் துணைப் பட்டியல் - உச்சநீதிமன்றம் உத்தரவு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

