நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, மேலாளர் ரவி, கண்காணிப்பாளர் ராஜேந்திரன், பேஷ்கார் நாராயணன், மணியம் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பழனி கால்நடை மருத்துவர் சக்திவேல் பாண்டியன் கூறுகையில், பழனிக்கோயில் யானை கஸ்தூரி முகாமிற்கு செல்லும் போது 4,975 கிலோ இருந்தது. தற்போது முகாம் முடித்து திரும்புகையில் 135 கிலோ குறைந்து 4,840 கிலோ எடையுள்ளது. முகாமில் யானைக்கு முழு உடல் பரிசோதனை, இயற்கையான சூழலில் நடைப்பயிற்சி, நல்ல பராமரிப்பு வழங்கப்பட்டுள்ளது. யானை நல்ல மனநிலையுடன் புத்துணர்ச்சியுடன் உள்ளது என தெரிவித்தார்.