ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

இளம்பெண் குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை

ஆம்பூர் அருகே அயித்தம்பட்டு கிராமத்தை சேர்ந்த சரிதாவுக்கும் (23), ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.  இந்நிலையில்

Updated On :11 பிப்ரவரி 2014, 10:44 am

ஆம்பூர் அருகே தன்னுடைய ஒன்றரை வயது ஆண் குழந்தையுடன் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆம்பூர் அருகே அயித்தம்பட்டு கிராமத்தை சேர்ந்த சரிதாவுக்கும் (23), ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.  இந்நிலையில் சரிதா தன்னுடைய ஒன்றரை வயது ஆண் குழந்தை முகிலனுடன் அயித்தம்பட்டு கிராமத்தில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு திங்கள்கிழமை வந்துள்ளார். வந்த அவர் வீட்டருகில் உள்ள ஒரு கிணற்றில் குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இருவருடைய சடலத்தையும் தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் மீட்டனர்.

தன்னுடைய மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி சரிதாவின் தாய் உமர்ஆபாத் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  திருப்பத்தூர் சார்-ஆட்சியர் ஷில்பா பிரபாகர் விசாரணை நடத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.