2013-ம் ஆண்டில் வேலூர், சேலம் பகுதிகளில் இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க. பிரதிநிதிகள் கொலை செய்யப்படதைத் தொடர்ந்து குற்றவாளிகளைப் பிடிக்க சி.பி.சி.ஐ.டி. சிறப்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு அமைக்கப்பட்டது. இந்த போலீஸார், 2013-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி நடத்திய திடீர் சோதனையின்போது மேலப்பாளையம் பங்களப்பா தெருவில் உள்ள வீட்டிலிருந்து 17.5 கிலோ வெடிபொருள்கள் (ஜெலட்டின் குச்சிகள்), 142 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக முகமதுதாசின், சாகுல்ஹமீது என்ற கட்டசாகுல் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.