பின்னர் அமைச்சர்கள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்துறை வளாகத்தில் உள்ள ஹெலிபேடிற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் அங்குள்ள அறையில் கடலூர் மாவட்ட திட்ட அலுவலர் மகேந்திரன், தமிழக முதல்வரின் பாதுகாப்பு பிரிவு எஸ்பி முத்துசாமி, ஏடிஎஸ்பி ராஜராஜன், சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் மற்றும் காவல்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்துறை, சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலைநகர் பேரூராட்சி அதிகாரிகளுடன் முதல்வர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் சிதம்பரம் கீழரதவீதியில் அமைக்கப்படவுள்ள பொதுக்கூட்ட மேடை பகுதியை பார்வையிட்டு புறப்பட்டு சென்றனர்.