வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக பணம் மோசடி

சிதம்பரம் கள்ளுக்கடை தெருவை சேர்ந்தவர் ரஜியா பேகம். எங்களுடைய நண்பர்கள் மூலம் அறிமுகமானார். அப்போது வெளிநாடுகளில் வேலைக்கு ஆள் அனுப்பும் வேலை செய்வதாகவும், சிங்கப்பூர், மலோசியா, துபாய் நாடுகளுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்புவதாகவும் தெரிவித்தா
Updated on
1 min read

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி 6 பேரிடம் ரூ. 4 லட்சம் பண மோசடி செய்ததாக பெண் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த முருகவேல், நெய்வேலியை சேர்ந்த ராஜசெல்வம், எ.புதூரை சேர்ந்த சிவசண்முகபூபதி உள்ளிட்ட 6 பேர் மாவட்ட எஸ்பி ஆ.ராதிகாவிடம் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்:

  சிதம்பரம் கள்ளுக்கடை தெருவை சேர்ந்தவர் ரஜியா பேகம். எங்களுடைய நண்பர்கள் மூலம் அறிமுகமானார். அப்போது வெளிநாடுகளில் வேலைக்கு ஆள் அனுப்பும் வேலை செய்வதாகவும், சிங்கப்பூர், மலோசியா, துபாய் நாடுகளுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்புவதாகவும் தெரிவித்தார்.

 இதனையடுத்து வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல விரும்பிய 6 பேரும், அவர் கேட்டபடி, ரூ.4 லட்சத்து 1,000 ரூபாயை, ரஜியா பேகத்திடம் கொடுத்தோம். ஒரு ஆண்டுக்கு முன்னர் பணம் கொடுத்தும், அவர் எங்களில் ஒருவரை கூட வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை. பணத்தை கேட்டு பலமுறை அவர் வீட்டுக்கு சென்றுள்ளோம். ஆனால் அவர் பணத்தை திருப்பி தரவில்லை.  இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரஜியா பேகம் தலைமறை வாகிவிட்டார்.  அவரிடமிருந்து எங்களுக்கு பணத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும்.

 புகாரை பெற்றுக்கொண்ட எஸ்பி, விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com