இதனால் ஆத்திரமடைந்த மூவரும் மோகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அலுவலகத்தில் இருந்த மேஜை, நாற்காலி, மின்விசிறி, தமிழக முதல்வர் படம், முன்னாள் முதல்வர் அண்ணா படம் மற்றும் தேசத் தலைவர்கள் படங்களை அடித்து உடைத்து, ஊராட்சி செயலாளரையும் தாக்கிவிட்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி செயலாளர் மோகன் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. தாக்கப்பட்டு சேதமுற்ற பஞ்சாயத்து அலுவலகத்தை ஊராட்சி மன்றத் தலைவர் வேணுகோபால் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சென்று பார்வையிட்டு உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.