ஏனோ, தானோ என நடத்திட வேண்டும் என இவ்வழக்கை நடத்தியதோ என்ற ஐயப்பாடு உள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமிழகஅரசின் ஆணையை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளனர். கோயிலில் முறைகேடுகள் நடந்திருந்தால், அதுகுறித்து தமிழகஅரசு விசாரிக்கலாமே தவிர, நிர்வாக அலுவலரை நியமிக்க முடியாது என நீதிபதிகள் கூறியிருப்பது இந்த வழக்கின் அடிப்படையையே அணுகாத தீர்ப்பாக உள்ளது. வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் தீட்சிதர்கள் தனி வகையறாவினர் (Denomination) அல்லர் என்பதையோ. இக்கோயில் கட்டப்பட்டதிலிருந்து பல கட்டடங்களில் விரிவாக்கப்பட்டது வரை அரசுகளின் பணியாக இருந்தனவே தவிர, இவற்றில் தீட்சிதர்களின் பங்கும் எதுவும் இல்லை என்ற உண்மையையோ உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. இந்த உண்மையை முன் வைத்து தமிழகஅரசு வலுவாக வாதாடாமல் போனது இத்தீர்ப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது.