சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலை பல நூற்றாண்டுகளாக தில்லைவாழ் அந்தணர்கள் என்றழைக்கப்படும் பொதுதீட்சிதர்கள் வைதீக முறைப்படி 6 கால பூஜையுடன் நிர்வகித்து வருகின்றனர். 6 கால பூஜைகளையும், திருவிழா பூஜைகளை தீட்சிதர்கள் சிறப்பாக நடத்துகிறார்கள் என்பதில் பொதுமக்களிடமும், பக்தர்களிடம் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் சமீபகாலமாக தீட்சிதர்கள் மீது பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயர் குறைந்தே காணப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் சரியான அனுகுமுறை இல்லாததும், தரிசனத்தை காலதாமதமாக நடத்துவதும், கோயிலுக்கு வரும் பக்தர்ளுக்கு எவ்வித வசதி இல்லாததாலும் தற்போதையை சூழலில் மக்கள் மத்தியில் அவர்கள் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தீட்சிதர்களுக்கு ஆதரவாக வந்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பினால் தினமும் கோயிலுக்கு சென்று வரும் பக்தர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. ஆனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியிலும் வரவேற்பு பெறவில்லை என்பதே உண்மை.