தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் ஏ.தமிழ்மகன்உசேன் சிதம்பரம் லால்கான் பள்ளிவாசலுக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். அங்கு அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு கூட்டத்திற்கு முகமதுஜியாவுதீன் தலைமை வகித்தார். தில்லை ஆர்.மக்கீன் வரவேற்றார். வக்பு வாரியத் தலைவர் ஏ.தமிழ்மகன் உசேன் சிறப்புரையாற்றினார். கடலூர் மாவட்ட ஜமாத் தலைவர் நுாருல் அமின் அஜ்ரத், மாவட்ட ஐக்கிய ஜமாத் பொதுச்செயலாளர் ஜமாலுதீன், இஸ்மாயில்நாஜி, லியாகத்அலி, முகமதுஅலி, மீர்அமீது, உசேன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்