ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வைத்தீஸ்வரன்கோவில் அருகே ஏழுபிடாரி கோவில் சிலைகள் திருட்டு: போலீஸார் விசாரணை

நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவில் அருகே ஆதமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மேலவெளி கிராமத்தில் ஏழுபிடாரிகள் கோவில் ஒன்று உள்ளது. மிகப் பழைமையான இந்தக் கோவில் திறந்த வெளி கோயிலாக உள்ளது.

News image
Updated On :10 ஜனவரி 2014, 5:17 am

சங்கர்

நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவில் அருகே ஆதமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மேலவெளி கிராமத்தில் ஏழுபிடாரிகள் கோவில் ஒன்று உள்ளது. மிகப் பழைமையான இந்தக் கோவில் திறந்த வெளி கோயிலாக உள்ளது. இங்கே எட்டு அம்மன் சிலைகள் சுமார் ஒன்றரை அடி உயரத்தில் பீடத்தில் பதிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த எட்டு சிலைகளும் பாறைகளால் பெயர்த்தெடுக்கப்பட்டு  களவாடப்பட்டிருந்ததை இன்று காலை ஊர் மக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.