தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தனியார் கெமிக்கல் தொழில்சாலை கொதிகலனில் விழுந்த தொழிலாளர் சாவு

நாகையை அடுத்த உத்தமசோழபுரத்தில் உள்ள பிரைம் கெமிக்கல்ஸ் என்ற தனியார் ரசாயன தொழில் சாலை. இந்தத் தொழில் சாலையில் சோடியம் சல்பேட், பேரீயம் கார்ப்பனேட் ஆகிய ரசாயனங்கள்

News image
Updated On :17 ஜனவரி 2014, 9:57 am

சங்கர்

நாகையை அடுத்த உத்தமசோழபுரத்தில் உள்ள ஒரு தனியார் கெமிக்கல் தொழில்சாலையின் கொதிகலனில் தவறி விழுந்த தொழிலாளர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

நாகையை அடுத்த உத்தமசோழபுரத்தில் உள்ள பிரைம் கெமிக்கல்ஸ் என்ற தனியார் ரசாயன தொழில் சாலை. இந்தத் தொழில் சாலையில் சோடியம் சல்பேட், பேரீயம் கார்ப்பனேட் ஆகிய ரசாயனங்கள் தயாரிக்கப்படுகிறது.

இந்தத் தொழில் சாலையில் சோடியம் சல்பேட் கொதிகலன் பிரிவில் பணியாற்றிய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பினோதாமாலிக்(25) வெள்ளிக்கிழமை காலை கொதிகலனின் மேற்பகுதியில் உள்ள நடைபாதையிலிருந்து கொதிகலனை கண்காணித்துக் கொண்டிருந்த போது, கொதிகலனுள் தவறி விழுந்தார்.

அதிக வெப்பத்துடன் இருந்த ரசாயன கொதிகலனுள் இருந்து தானே மேலே ஏறிய பினோமாலிக் பலத்தக் காயங்களுடன் கீழே குதித்தார். சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

நாகூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.