மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஆசிட் ஊற்றி மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை

கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி ஈஸ்வரன்கோயில் வீதியை சேர்ந்தவர் பாபு என்ற சம்சுதீன்(54). இவருக்கும் ஸ்ரீமுஷ்ணத்தை ரகமத்நிஷா(50) என்பவருக்கும் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்

Updated On :22 ஜனவரி 2014, 2:14 pm

ஆசிட் ஊற்றி மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி ஈஸ்வரன்கோயில் வீதியை சேர்ந்தவர் பாபு என்ற சம்சுதீன்(54). இவருக்கும் ஸ்ரீமுஷ்ணத்தை ரகமத்நிஷா(50) என்பவருக்கும் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன் உள்ளார். திருமணமாகி 2 ஆண்டுகளில் வெளிநாட்டு வேலைக்கு(டெய்லர்) சென்ற அவர், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊருக்கு வருவாராம்.

மனைவி நடத்தையில் சந்தேகப்பட்ட பாபு என்ற சம்சுதீன் ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதும் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளிநாட்டுக்கு சென்ற அவர் அதே ஆண்டில் அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி, மனைவி, மகனுக்கு தகவல் தெரிவிக்காமலேயே வெளிநாட்டிலிருந்து திடீரென சொந்த ஊருக்கு வந்துள்ளார்.  அன்று இரவு ரகமத் நிஷாவை அடித்து உதைத்த அவர், திடீரென உடலில் பல இடங்களில் ஆசிட்டை ஊற்றிவிட்டு தப்பியோடிவிட்டார்.சிதம்பரம், கடலூர் அரசு மருத்துவமனைகள், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலனிக்காத நிலையில் நவம்பர் மாதம் 7- ஆம் தேதி ரகமத் நிஷா உயிரிழந்தார்.

இதுகுறித்து புவனகிரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, பாபு என்ற சம்சுதீனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கடலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் புதன்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.நீதிபதி எஸ்.சுபாதேவி, குற்றம்சாட்டப்பட்ட பாபு என்ற சம்சுதீனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.  அரசு தரப்பில் வழக்குரைஞர் பி.நந்தகுமார் ஆஜரானார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.