பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தமிழகத்தில் உள்ள தேசிய தமிழர் கட்சி, ஆம் ஆத்மி கட்சியுடன் இணைப்பு!

கடந்த ஜன.18,19 தேதிகளில் சென்னை வளசரவாக்கம் ஜே.எம்.ஜே திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சி மாநில ஒருங்கிணைப்பு கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினாசாமி,

News image
Updated On :24 ஜனவரி 2014, 12:27 pm

ஜி.சுந்தரராஜன்

தமிழகத்தில் உள்ள தேசிய தமிழர் கட்சி, ஆம் ஆத்மி கட்சியுடன் இணைக்கப்பட்டது.

கடந்த ஜன.18,19 தேதிகளில் சென்னை வளசரவாக்கம் ஜே.எம்.ஜே திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சி மாநில ஒருங்கிணைப்பு கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினாசாமி, இணை ஒருங்கிணைப்பாளர் லெனின், பொருளாளர் டாக்டர் ஆனந்த் கணேஷ் ஆகியோர் முன்னிலையில் சிதம்பரத்தை தலைமையிடமாக கொண்ட தேசிய தமிழர் கட்சி, ஆம் ஆத்மி கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தேசிய தமிழர் கட்சி மாநிலத் தலைவர் அ.ச.லோகநாதன், செயற்குழு உறுப்பினர்கள் கணேசன், சண்முகம், பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜசேகர், மணிகண்டன், நூர்பாஷா, ஜானகிராமன் உள்ளிட்டோர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.