இச்சூழலில் பரங்கிப்பேட்டை, கிள்ளை பகுதிகளில் மீண்டும் இறால் குட்டைகள் வெட்டப்படுவது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பரங்கிப்பேட்டை சூர்யா நகரில் கிள்ளை மீனவர்கள் குடியிருப்பிற்கு அருகில் இறால் குட்டை வெட்டி வருகின்றனர். தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான சுமார் 200 புறம்போக்கு நிலத்தில் நான்கு குட்டைகளும், பட்டா இடத்தில் ஒரு குட்டையயும் அமைத்து வருகின்றனர். இதற்கு உப்பு நீரை சேமிப்பதால் அப்பகுதி விவசாயமும், நிலத்தடி நீரையும் கடுமையாக பாதிக்கும்.