தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன்கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன. இதன் மூலம் நாள்தோறும் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு, அடிக்கடி ஏற்படும் பழுது காரணமாக மின்சார உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில், 2-வது யூனிட்டில் புதன்கிழமை காலை 9 மணியளவில் கொதிகலனில் ஏற்பட்ட பஞ்சர் காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த பழுதை சரிசெய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் வியாழக்கிழமை இரவுக்குள் இந்த பணிகள் முடிவடைந்துவிடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.