ஊர்வலத்தில் ஞானரதத்தில் தருமை ஆதீனம் ஸ்ரீசண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், ஸ்ரீகாசி மடம் ஸ்ரீமுத்துக்குமாரசாமித் தம்பிரான் ஆகியோர் ஊர்வலத்தில் வலம் வந்தனர். மேலும் ஊர்வலத்தில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீஅம்பலவாண தேசிய பரமாச்சாரியார், திருச்சி மெளன மடம் கட்டளை தம்பிரான் ஸ்ரீகுமாரசாமி தம்பிரான், சிதம்பரம் ஸ்ரீமெளன மடாதிபதி ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகள், வடலூர் ஊரன் அடிகளார் மற்றும் விழாவிக்குழுவினர் ஆர்.கே.கணபதி, டாக்டர் ஆர்.முத்துக்குமரன், ஆர்.எம்.சுவேதகுமார், கு.சேதுசுப்பிரமணியன், எஸ்.ஆர்.ராமநாதன், தோப்பு கே.சுந்தர், டாக்டர் பத்மினி கபாலிமூர்த்தி, இந்து ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர் மு.செங்குட்டுவன், ஜோதிகுருவாயூரப்பன், முத்துகணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.