விருதுநகர் அருகே மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் நீதிமனறம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு அருகே தோனுகால் கிராமத்தைச் சேர்ந்த கருப்பணன் என்பவரின் மகன் குருநாதன்(28). இவரது மனைவி பாண்டீஸ்வரி(25). இவர் அடிக்கடி மதுக்குடித்து வந்து மனைவியுடன் தகராறு செய்வராம். இதேபோல் கடந்த 26.10.2012 அன்று அளவுக்கு மீறி மதுக்குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார். பின்னர் தகராறு முற்றியதில் குருநாதன் சமையலுக்கு வைத்திருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து மனைவி பாண்டீஸ்வரியின் மீது ஊற்றி தீ வைத்தாராம்.
இதில் படுகாயம் அடைந்த பாண்டீஸ்வரியை உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை ராஜாஜி மருத்துமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 1.11.2012 அன்று சிகிச்சை பலனின்றி பாண்டீஸ்வரி உயிரிழந்தார். இது தொடர்பாக பாண்டீஸ்வரியின் தாயார் மாலையம்மாள் மல்லாங்கிணறு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இது தொடர்பான வழக்கு விருதுநகர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்டாலின் செல்வராஜ், மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த குற்றத்திற்காக குருநாதனுக்கு ஆயுள்தண்டையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செல்வப்பெருந்தகை சிறைபிடிப்பு! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!

வருமான வரித்துறை அதிகாரிகளால் சிறைப்பிடிப்பு: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு!
திருட மட்டும்தான் தெரியும்... கர டிரைலர்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

