ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சுய நிதியில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் விலையில்லா மடிக்கணினி கேட்டு முற்றுகை: சாலை மறியல்

ஸ்ரீவில்லிபுத்தூர்.அரசின் விலையில்லா மடிக்கணினியை சுய நிதி பாடப் பிரிவில் படித்த மாணவ மாணவியருக்கும் வழங்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில், வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ மாணவியர் மாவட்டக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர்.

News image
Updated On :11 ஜூலை 2014, 9:12 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர்.அரசின் விலையில்லா மடிக்கணினியை சுய நிதி பாடப் பிரிவில் படித்த மாணவ மாணவியருக்கும் வழங்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில், வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ மாணவியர் மாவட்டக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் சுமார் 3 மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தி இது அரசின் கொள்கை முடிவு. உங்களது கோரிக்கையை அரசுக்கு தெரிவிப்பதாகக் கூறியதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் திரு இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சி.எம்.எஸ்.மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் சுய நிதி பாடப் பிரிவில் படித்த சுமார் 300 மாணவ மாணவியர் மாவட்டக் கல்வி அலுவலகம் முன்பு திடீரென தங்களுக்கும் அரசின் விலையில்லா மடிக்கணினி வேண்டும் என்று கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இவர்களை போலீஸார் அழைத்து மாவட்டக் கல்வி அலுவலக வளாகத்திற்குள் கொண்டு வந்தனர். அங்கு அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இவர்களிடம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார், மாவட்டக் கல்வி அலுவலர் விஷ்ணுதாஸ் ஆகியோர் அரசின் கொள்கை முடிவு குறித்து விளக்கினர்.

இது மாவட்ட நிர்வாகமோ, பள்ளியோ எடுத்துள்ள முடிவு இல்லை. உங்களது கோரிக்கையை எழுத்துப் பூர்வமாக கொடுங்கள். அரசுக்கு பரிந்துரை செய்து அனுப்புவோம் என்று கூறினர். சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் இந்த பேச்சு வார்த்தை நடைபெற்றது. பின்னர் மாணவ மாணவியர் தங்களது கோரி்க்கையை எழுதி கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.