இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

சிதம்பரம் பகுதியில் இரு இளம்பெண்கள் மாயம்: போலீஸார் வழக்குப் பதிவு

சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரியைச் சேர்ந்த கண்ணபிரான் மகள் மலர்விழி (18). நந்தனார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டூ பயிலும் இவர் கடந்த ஜூலை 9-ம் தேதி முதல் காணவில்லை என

News image
Updated On :12 ஜூலை 2014, 1:59 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் பகுதியில் இரும் இளம்பெண்கள் காணவில்லை என போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரியைச் சேர்ந்த கண்ணபிரான் மகள் மலர்விழி (18). நந்தனார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டூ பயிலும் இவர் கடந்த ஜூலை 9-ம் தேதி முதல் காணவில்லை என அவரது தாயார் தையல்நாயகி சிதம்பரம் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதேபோன்று சிதம்பரம் அருகே கே.ஆடூர் நடுமேட்டைச் சேர்ந்த தங்கசாமி மகள் கவிதா (14). இவர் சிதம்பரம் ஆறுமுகநாவலர் பள்ளியில் பத்தாம் படித்து தேர்வில் தோல்வியுற்று வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை 8-ம் தேதி அதே ஊரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றவர் காணவில்லை என அவரது தந்தை தங்கசாமி சிதம்பரம் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இந்த இருசம்பவங்கள் குறித்து சிதம்பரம் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.