ஆம்பூர் அருகே மின்னூரில் மணல் கடத்திய டிப்பர் லாரியை வருவாய் துறையினர் வெள்ளிக்கிழமை நள்ளிரவு பறிமுதல் செய்தனர்.
திருப்பத்தூர் சார்-ஆட்சியர் ஷில்பா பிரபாகருக்கு கிடைத்த தகவலின் பேரில் ஆம்பூர் வருவாய் ஆய்வாளர் செந்தில், கிராம நிர்வாக அலுவலர்கள் கார்மேகம், மணி ஆகியோர் கொண்ட குழுவினர் அங்கு சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஓரிடத்தில் மணல் சேமித்து வைத்து அங்கிருந்து டிப்பர் லாரி மூலம் மணல் கடத்து செயல் நடந்து கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. அதன்பேரில் வாணியம்பாடி அருகே வளையாம்பட்டை சேர்ந்த பன்னீர் என்பவருக்கு சொந்தமான டிப்பர் லாரியை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.