அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டி.விஸ்வநாதன் மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினார். அவர் பேசியது: பிளஸ்டூ தேர்வில் 700 மதிப்பெண்கள் பெற்றவர்களை கல்லூரியில் சேர்த்து, பல்கலைக்கழக அளவில் தரவரிசை பட்டியலில் இக்கல்லூரி இடம்பெற்றுள்ளது சரித்திர சாதனையாகும். தமிழகஅளவில் தரவரிசை பட்டியலில் 170வது இடத்தில் இக்கல்லூரி இடம் பெற்றுள்ளது. விரைவில் முதல் 25 இடங்களில் இடம்பிடிக்கும் என்பதில் ஐயமில்லை. 19-ம் நூற்றாண்டில் ஐரோப்பா நாடுகள் உலகை ஆண்டன. 20-ம் நூற்றாண்டில் அமெரிக்க நாடுகள் உலகை ஆண்டன, 21-ம் நூற்றாண்டில் இந்தியாவும், சீனாவும் உலகை ஆளும்.